பாக்., விமானத்தை தகர்த்துவிட்டு குதித்த அபிநந்தன்

விமானப்படை வட்டாரங்கள் கூறியதாவது: நேற்று(பிப்.,27) பாகிஸ்தானின் அதிநவீன போர் விமானமான எப் – 16 விமானங்கள், இந்திய எல்லைக்குள் அத்துமீறி 7 கி.மீ., தூரம் நுழைந்தன. இந்தியாவில் 4 இடங்களில் தாக்குதல் நடத்த முயற்சி செய்து தோல்வியில் முடிந்தது.
பாகிஸ்தான் விமானங்கள், இந்திய பகுதிக்குள் நுழைந்ததை பார்த்ததும், அங்கிருந்த நமது போர் விமானமான மிக் 21 விமானங்கள் உடனடியாக விரட்ட துவங்கின. இதனையடுத்து எப் – 16 விமானங்கள் பாகிஸ்தானுக்கு திரும்ப துவங்கின. இருப்பினும், அவற்றை, இந்திய போர் விமானங்கள் விரட்டின. அபிநந்தன் சென்ற மிக்- 21 போர் விமானம், எப் – 16 விமானங்களுக்கு இடையே சிக்கி கொண்டது.

அவரது விமானம் தாக்கப்பட்டது. நொறுங்கி விழுவதற்கு முன்னர், அபிநந்தன், ஆர் 73 ஏவுகணை மூலம் எப் – 16 விமானத்தை தாக்கினார். பழைய மிக் போர் விமானத்திலிருந்து, அதிநவீன போர் விமானமான எப் -16 விமானத்தை தாக்கியது அரிதிலும் அரிதான சம்பவமாக கருதப்படுகிறது.
பின் தனது விமானத்திலிருந்து குதித்த அபிநந்தன், காற்றின் காரணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இறங்கினார். பாகிஸ்தான் விமானியும், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இறங்கினார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Share This News

Related posts

Leave a Comment